வியாழன், 29 ஜூலை, 2021

தண்ணீர் தேசம்


தண்ணீர் தேசம்
                                                                                                                                  தாகத்தின் பசி தண்ணீர்.நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. நமக்கு தண்ணீர் தேவை. ஆனால் நீரை சேமிக்க நாம் முன் வருவது இல்லை. நீர் நமக்கு முக்கிய தேவையாக உள்ளது.முதலில் நாம் இயற்கையைப் பேன வேண்டும். அதன்மூலம் தான் நமக்கு என்னற்ற பலன்கள் கிடைக்கும்.                                                                                                                       மனித வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம். நாம் எதைப்பெற வேண்டுமானாலும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.அதனால்தான், மனித வாழ்க்கையே போராட்டம் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஏராளம். அதில் நாம் எதை கடைபிடிகிறோம் என்பதைப்பொருத்து தான் நம் வாழ்வு இனிமையானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.                                                                                                                                         நீரைச்சேமிக்க நம்மால் முடிந்த செயல்களை  சமூக நல குழுக்கலோடு இனைந்து குளம்,குட்டை, மற்றும் ஏரிகளை தூர்வாரி மக்களின் தண்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.நீரில்லா உலகை மாற்றி, நீராதாரம் உள்ள உலகு படைக்க உறுதி ஏற்போம். புதிய தண்ணீர் தேசம் படைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக