வெள்ளி, 13 நவம்பர், 2015

இன்னொரு மனம்..

இன்னொரு மனம்..
இன்னொரு முகம்
இருக்கிறது என்பதைக் காட்ட
இல்லாத முகத்தை எப்படி
இயல்பாய் காட்டுவது..
இதயத்தை பிழிந்து எடுக்கிறது
அவனது பிரிவு..
எண்ணியடங்காது சொல்லியும் மாளாது
காதலில் விழுந்த என்னைத்தூக்கிவிட என்
காதலன் எப்போது வருவான்.
நாளொரு வன்னம்
பொழுதொரு மேனியும் என்னவனைக்காண
என் இதயம் அலைபாயுது..
கட்டிப்பிடி வைத்தியமொன்றைக் கற்றுக்கொடுத்தேன்
அதில் அவன் பைத்தியமாய் ஆனானென்று
செவிவழிச்செய்தியொன்று நான் கேட்டேன்..
மறுபிறவியெடுத்து அவனோடு வாழ ஆசை
ஆனால் மனமில்லாமல் போனது நிறையாசை..
கனவொன்று நான் கண்டேன் -அதில்
அவன் விளையாட நான் கண்டேன்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக