வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஒரு காட்டமான செய்தி..

எல்லாருக்கும் ஒரு காட்டமான செய்தி..
ஏங்க.. பிளாக்கர்ல எழுதனும், பிளாக்கர்ல எழுதனும்னு சொல்ரீங்கலே.. நாங்க எழுதுனா யார் படிக்கிறது..
நானும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் இதப்பத்தின ஒரு தகவலும் இல்லை. நான் என்னால முடுஞ்சத , எனக்கு தெரிஞ்சத பக்கத்தில் இருந்தவங்களுக்கு சொல்லிக்கொடுத்து பிளாக்கர்ல எழுதவச்சிருக்கேன்..
சரி ஒரு வேல நம்ம எழுதர பதிவு சரியில்லாம இருக்குமோனு கூட நெனச்சிருக்கேன்.இதுல என்னா கொடுமைய்னா, வலைப்பதிவுத்திருவிழாவில் பரிசுப்போட்டினு நடத்தி. நல்ல பழந்தின்னு கொட்ட போட்ட நபர்களுக்குத்தான் பரிசு கொடுத்தார்கள்..
அதில் யாருமே சாமானியர்கள் கிடையாது. எல்லாரும் பெரிய பெரிய கல்லூரிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள்.அவர்களுக்கு தெரியாத விசயங்கள் என்ன இருக்கு?படித்தவர்கள் பொதுவாக நிறைய தெரிஞ்சு வைத்திருப்ப்பார்கள். சரி நீங்க எப்படியோ போங்க..
நாங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எப்படித்தெரியும். புதுசா எழுதர எங்களமாதிரி புதுப்பதிவர்களுக்கு ஒரு பிடிப்புமே இல்லை. தமிழை வளர்க்க எல்லாருடைய பங்கும் முக்கியம் என்பதை நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கனும்
இதுல நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்குது.ஆனா அத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னுதான் தெரியல. ம்ம்…
ஏதோ, பிளாக்கரப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அதனால தான் இவ்வளவுதூரம் அதுவும் தமிழில் தட்டச்சு வரைக்கும் தெரிஞ்சது..இத எல்லாருக்கும் நான் சொல்லலாம்னா தெரியல..

 ஏதோ என்மசில் பட்டத இந்த பதிவில சொல்லனும்னு நெனச்செ.. சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக