செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தேசப்பிதா காந்தியடிகள்

தேசப்பிதா காந்தியடிகள்
 புரட்சியை புதிதாய் படைத்தவர்
 பூவையும் புரட்சி செய்ய வைத்தவர்
 அஹிம்சை என்ற அன்பு ஆயுதத்தால்
 பூவும் புயல் வீசும் என்று காட்டியவர்...

 வாய்ச் சொல்லால் மனித மனதில்
 ஆழம் பொதிந்து ஆட்கொண்டவர்
 அந்நியனென்று நினையாமல்
 அனைவரையும் அன்பால் ஈர்த்தவர்..

 தமிழனைக் கண்டு  தனை வருத்தி
 அரை ஆடை உடுத்தி
 இவர் என்று ஆடை அனிவாரோ
அன்றே நானும் அனிவேன் என்று
 உள்ளத்தால் உறுதி கொண்டவர்..

 வெள்ளை முகங்களை வெளியேற்றி
 கருப்பு முகங்களுக்கு ஒளியேற்றியவர்..
 நம்மை இந்தியரென்று சொல்ல
 நாளும் உழைத்த உத்தமர்..

 தண்டியாத்திரை மேற்க்கொண்டு
 உப்புசத்தியாகிரகத்தில்
உலகையே மிரள வைத்த மகான் அவர்..

 இயேசுவையும் புத்தரையும் மதித்து
 இன்னுயிரையும் அன்பு செய்யென்று
 மாண்புமிக்க மதிநுட்பங்களை
கற்றுத்தந்தவர் நம் காந்தியடிகள்..

 அரும்பென முளைத்த விஷவித்தகர்களை
 வேரறுத்து வெளியில் தள்ளி
 வெட்கமுற காறி உமிழ்ந்து
 நாட்டைக் காப்பாற்றியவர் நம் காந்தி.

. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று
 உள்ளத்தால் இனி இல்லை என எண்ணி
பாசத்தையும் ஏக்கத்தையும்
 பதியவைத்து மாசற்ற மனங்களை வளர்த்தவர்..

 அறியாமையில் ஆழ்ந்துரங்கிய
 அன்பு மக்களை ஆரத்தழுவி
 அல்லல் இனி இல்லை என
அறியாமையைத் தூக்கியெறியச் செய்தவர் நம் காந்தி..

 அன்பான அறிவாற்றலால்
அவையம் அனைத்தையும் ஆளமுடியும் என்ற
 அன்புக்கட்டளையை 
அனைவரையும் ஆசையோடு பாடவைத்தவர்..

 அண்ணல் காந்தியடிகள் ஒரு சகாப்தம்
 உலகனைத்தும் இந்தியாவைத் தேடிவர
 நட்புக்காக அயல்நாட்டவரோடு
 கைகோர்த்து வெற்றிக் களிப்பில் இணைய
 மனதில் இடம் கொடுத்தவர் காந்தி..

  வையகமே வானளவும் உயர்ந்து
 வாழ்த்துக் கீதம் காந்தியடிகளுக்காய்
 வசந்தமனைத்தும் இந்தியருக்காய் என
 வாகை சூடிய மகான் நம் காந்தி

 வெள்ளையனை வெளியேற்றி 
-நாட்டில் உள்ளவனைக் களிப்பேற்றி
 கவிதையும் காவியமும் களைகட்ட
 கானகத்துக் குயிலொன்று இசை பாட
 தேசியக் கீதமிசைத்து நெஞ்சங்களை
புரட்சித் தீ பற்றியெரியச் செய்தவர் நம் காந்தி..

  உலகத்தையே வியக்கவைத்த வித்தகர்
 அவரின் சொல்லாலும் பேச்சாலும்
மக்களின் மனங்களை மனங்கொத்திப் பறவையென
பேச்சு மந்திரத்தால் வசியம் செய்தவர்.
 அவருக்கு ஈடு இணை இல்லை
இனி இருக்கப் போவதும் இல்லை
 நம் தேசப்பிதாவைப் போல
 இனி எத்தனை காந்திகள் நம் நாட்டில் பிறக்கப் போகிறார்கள்…
 இல்லை என்றே சொல்லலாம் ..

ஆகவே நம் தேசப் பிதாவை வணங்குவோம்.அவரின் ஆற்றல் மிகு செயல்களுக்காய் அவரைப் பாராட்டுவோம். அவர் விட்டுச் சென்ற அகிம்சை என்ற அன்புப் பணியை நாமும் தொடர்ந்து ஆற்று வோம்..
 வாழ்க நம் பாரதம்
 வளர்க நம் இந்தியா
 ஜெய்ஹிந்த்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக