வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கல்விப்பெருந்தகை கர்மவீரர் காமராசருக்கு

கல்விப்பெருந்தகை கர்மவீரர் காமராசருக்கு

கல்வி என்ற அறிய உயிரை
கண்ணாகக் கொடுத்த – எம்
கல்வி ஆசான்
கல்விப்பெருந்தகை
கர்மவீரர் காமராசரே…

விருதுநகர் மண்ணில்
விருதுபட்டி முத்தாய்ப் பெற்ற
தலை மகனே
நீவீர் வாழ்க…

சாலைகள் தோறும்
கல்விச் சாலைகள் பெருகிட
சாலச்சிறந்த கல்வியை
சாமானியனும் பெற்றிட
சதா உழைத்த எங்கள்
சிம்ம சொப்பனமே
நீவீர் வாழ்க…

கல்வியின் மேன்மையை
கிராமங்களின் வாசல் வரை
வந்து விளையாட செய்தவரே…

கல்வி இல்லா இடம்
இனி இல்லை என்று
பார்போற்றிட செய்தவரே…

படித்தும்.. இன்றும்
பாமரனாய் வாழும்
மனிதர் மத்தியில்
படிக்காத மேதையாய் – அன்றே
அரசியலில் ஆய்வு செய்தவரே…

அரசியலில் ஆய்ந்தவரும்
அன்னார் உம்மையே
அனுகிடச் செய்தவரே…

மக்களின் மாண்பையும்
மேன்மையையும் மதித்து
மங்கா புகளோடு
மனிதர் மத்தியில்
மறையா தழும்பாய், சுவடாய்
வாழ்பவரே…

உம் வாழ்க்கை கற்றுத்தந்த
பாடங்கள் பல…
எளிமைக்கு விலாசம்
உன் வீடே..
ஏழையும் பாளையும்
உங்களுக்கு அழையா
விருந்தாளிகளே…

சர்க்காரின் சலுகையை
சாமானியனுக்காகவே என்று
சலுகைகளைத் தூக்கி எறிந்தவரே…

கிடைத்தவரைப் போதும்
என்று என்னும் மனிதர் மத்தியில்
கிடைத்ததையெல்லாம்
கிடைக்காதவனுக்கு
பங்கிட்டு அழகு பார்த்தவரே…

சிபாரிசுக்கு வந்த உறவினனையும்
சிந்திக்க வைத்தவரே..
சிரமங்கள் இல்லாமல்
சிகரங்களை எட்ட இயலாது என்றும்
சிக்கன வாழ்க்கை
சிங்காரத் தோட்டம்
சிதைந்த மனங்களும்
சிந்தித்தால் போதும்
வேதனைகளையும் சாதனைகளாக்கி
சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும்..
சிரத்தையோடு போராடினால் போதும்
சிகரம் நம் கைகளில் தவழும் என்ற
சிந்தனையைத் தந்தவரே…

வாழ்க்கை என்ற பாடத்தை
வாழ்ந்து காட்டிவிட்டுச்
சென்றுள்ளீர்..

வாழ்க்கையை வரமாகப்
பெருவது வழக்கம் - ஆனால்
வரத்தையே வாழ்வாகப்
பெற்று எங்களையும் இப்படி
வாழ அழைப்பு விடுத்தவவரே…


விதையிட்ட இடத்திலே
விருச்சமாவோம் என்றும்
எண்ணித்துனிந்த காரியம்
எளிதில் வெற்றி பெறும் என்ற
விந்தை மந்திரத்தை
விட்டுச் சென்றவரே…

ஓயா உழைப்பும்
உறிதியான நம்பிக்கையும்
ஊக்கப்படுத்தும் வார்த்தையும்
வாழ்க்கையை இலகுவாக்கும்…

அன்பான அறிவுரையும்
ஆறுதலான வார்த்தையும்
இன்பம் நிறைந்தை இதயமும்
ஈகை கொண்ட மனமும்
உறுதியான உள்ளமும்
ஊக்கமுள்ள முயற்சியும்
எண்ணத்தில் தெளிவும்
ஏக்கத்தில் ஆக்கமும்
ஒருங்கினைந்த சிந்தனையும்
ஓயாத உழைப்பும்
தனிமனித வெற்றிக்கு
வழிகாட்டும் படிக்கட்டுக்கள்

இது கர்மவீரர் காமராசர் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ள வாழ்வியல் கணிகளாகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக