வியாழன், 10 செப்டம்பர், 2015

பூ

பூ
என்மேல் விழும் பார்வைகள் எல்லாம்
எளிதில் மறைபவையல்ல
ஏனெனில்
என் பெயர் பூ…

எனக்கு குணமுண்டு, மணமுண்டு
ஆனால் மனமில்லை
இருந்திருந்தால் உங்களை முழுவதும்
அறிந்திருப்பேன்…

எனக்கு எவ்வளவு
கிராக்கி என்று
எல்லோரிடமும் கேட்டுப்பாருங்கள்…

மங்கையரின் மனங்களில்
மட்டும் மனிக்கொருமுறை
வாசம் செய்வேன்…
ஏனெனில்
என் வாசனை அப்படி…
எனையறிந்த அநேகரில்
சிறந்தோர் மங்கையரே…
பேதை, பெதும்பை
மங்கை, மடந்தை
அரிவை, தெரிவை,
பேரிளம் பெண்-என
ஏழு பருவ மங்கையரும்
எனக்காய் ஏங்கித்தவிக்கும்
ஏற்றம் பெற்ற பூ நானே…

எளிதில் என்னை
மறந்துவிட முடியாது…
எப்போதும் என்னை
துறந்துவிடவும் முடியாது…

மங்கள அமங்கள
நிகழ்வுகள் யாவும் – என்
வரவேற்பை எண்ணியே
தவம் கிடக்கும்…

உன்னை அழகுசெய்தவன்
உன்னைப் படைத்தவன் – ஆனால்
உன்னைப் படைத்தவனையே
அழகு செய்வது பூ நானே…

என்மேல் விழும்
பனித்துளியும்
வெட்கத்தின் முன்
அங்கும் இங்கும்
பிதுங்கிய விழிபோல
வெளியில் அலையும்…

பூவும் பூவும்
மோதிக்கொண்டால்
தித்திக்கும் தேன் துளியும்
தானாய் வீனாய்ப்போகும்…

என் இதழ்வருடி
ஸ்பரிசம் தூண்ட
என் இதயத்தைக்
களவு செய்ய
சூத்திரனும் சாத்திரனும்
சத்திய வேள்வியிலே
சங்கமிக்க எனை
அள்ளித்தூவுவானே…

கடவுளிடம் வரமொன்று
பெற முடியுமானால் – நான்
வாடாமல் இருக்க
வரம் வேண்டுவேன்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக